முள்நாரிப்பழம் தெரியுமா

'லைச்சி' பழ குடும்பத்தைச் சேர்ந்த ரம்புத்தான் பழ மரத்தைப் பயிரிடுவது மிக எளிதான ஒன்றே. நீங்கள் சாப்பிட்ட பழத்தின் விதையை பயிரிட்டாலே சில தினங்களில் முளையைப் பார்க்கலாம். இம்மரமானது சுமார் 10 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளர கூடிய தன்மை வாய்ந்தது.
ரம்புத்தான் பழத்தை அப்படியே பழமாகவும், 'ஜெல்லி' செய்தோ சாப்பிட சுவையாக இருக்கும். வெறும் சுவை மட்டுமில்லாமல் இதில் சில மருத்துவ குணங்களும் அடங்கியிருப்பது ஆச்சிரியமே. இதில் பத்து சுளைகளை எடுத்து 3 குவளைத் தண்ணீர் விட்டு, 1 1/2 குவளை வரும் வரை கொதிக்க வைத்து அருந்தினால் எப்படிப்பட்ட சீதபேதியும் குணமாகும் என்கிறார்கள் அறிந்தவர்கள். அதோடு இந்தப் பழமானது உடல் எடையைக் குறைக்கவும் மிகவும் உதவுவதாக சொல்கிறார்கள். சாப்பிட்டுதான் பாருங்களேன்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: