மீண்டும் காணும் நிமிடங்கள்...

மீண்டும் காணும் நிமிடங்கள்...

உனக்கென இந்நொடிகள்
என் இதய நாளங்களில் இருந்து


உன் அன்பினை மட்டுமே


ஒரு கவிபாடவென
உன் நித்திய வாசல் தேடி
ஓடிவரும் உதடுகளை


ஓரங்கட்டும் உன் விளிகள்!


உண்மையில் நிஜமானவையா
இல்லை

நிஜமாக்கப்பட்டவையா
பாவி மனம்

மீண்டும் உனைக்குறித்தே
புலம்ப ஆரம்பித்து

விட்டதே !
தெருவோரம் உனை நான்
மீண்டும் காணும் நிமிடங்கள்


அவை உனை என் இதயம்
மன்னிக்கும் அடுத்த கணங்களாயின !


உதடுகளில் மெல்ல முடியாத வார்த்தைகள்


அந்நிமிடங்களில் என் முதல்
எதிரிகளாய் உன் முன்னிலையில்....!

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement