வழியதில் உன் வரவுக்காய்...

வழியதில் உன் வரவுக்காய்...

உணர்வுகளை சிறையிடுகிறது மனம்
உன் நினைவுகளை மட்டும் மீண்டும்
உரசிப்பார்க்கின்றது இதயம்

கனவுகளை காட்சிப்படுத்தியது உள்ளம்
கண்கள் அறியாமலே காதலை
கண்டுகொண்டது இதயம்

காதுகளின் ஓரம் சத்தமிடும் பச்சிகள்
காதலின் கனவுகளை மீட்டிட
கண்முன்னே சிதறிக்கிடக்கும் காகிதங்களாய்

வானிலே வட்டமிடுகிறது உயிர்
வைகரையின் வசந்தங்களை காணாமலே
வண்ண நிலவதன் வரவினை வேண்டியே

பசித்திருக்கும் உடலிலும் எங்கும்
படர்ந்திருக்கும் வெப்பமாய்
பரவிக்கிடக்கும் வசந்தங்கள்

இன்பங்களை சுமக்கின்றது கற்பனை
இரவுகளை மிஞ்சுகிறது என்றுமே
இதயம் கனக்கின்றது அதனால்

வரம்புகளை மீறுகின்றன கால்கள்
வாட்டத்திலும் வட்மிடுகின்றன விளிகள்
வழியதில் உன் வரவுக்காய்
வாடிக்கிடக்கின்றன வசந்தங்கள்.

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement