பருப்பு சாதம்


தே.பொருட்கள்:

பொன்னி அரிசி - 11/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டுப் பல் - 4
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை,கொத்தமல்லி - சிறிது

தாளிக்க:

பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்



செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பூண்டு+தக்காளி+பச்சை மிளகாயை அரியவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+தக்காளி+பூண்டு+பச்சை மிளகாய்+கறிவேப்பில்லை,கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

*பொன்னி அரிசிக்கு 1 கப்=2 கப் தண்ணீர் அளவு,ஆக 11/2 கப் அரிசிக்கு=3 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் துவரம்பருப்புக்கு 1 கப் தண்ணீர் அளவு.

*வதங்கியதும் அரிசி+துவரம்பருப்பு+உப்பு+மஞ்சள்தூள்+4 கப் தண்ணீர் வைத்து குக்கரை மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறவும்.

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement