• பாரசிடமால் - தேவை எச்சரிக்கை

    காய்ச்சல், உடல் வலி என்றால் உடனே நம்மில் பலரும் நேராக மருந்து கடைக்கு சென்று குரோசின், கால்போல் போன்ற மாத்திரைகளின் பெயரை சொல்லி அவற்றை கேட்டு வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    காய்ச்சல், உடல் வலி போன்றவற்றிற்கு பாரசிடமால் வகையை சேர்ந்த இந்த மாத்திரைகள் ஏற்றதுதான் என்ற போதிலும் அளவுக்கு அதிகமாக இவற்றைப் பயன்படுத்தினால் ஈரல் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அசிடாமெனோபின் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரசிடமால் மாத்திரைகள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்காவின் எஃப்டிஐ குழு, இந்த மாத்திரைகளின் லேபிள் மீது எச்சரிக்கை வாசகம் பொறிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    பாரசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தும் அளவை கட்டுப்படுத்துமாறு நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ள இந்த அமைப்பு, தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள நாள் ஒன்றுக்கு 4 மில்லி கிராம் என்ற அளவை விட குறைவாக அவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    இதுபற்றி இந்திய மருத்துவர்கள் கூறுகையில், பாரசிடமால் மாத்திரைகள் நமது நாட்டைப் பொறுத்தவரையில் டாக்டர்கள் பிரிளூ;கிருப்ஷனுடன் எடுத்துக் கொண்டால் காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற உபாதைகளுக்கு ஏற்றது தான் என்று கூறியுள்ளனர். ஆனால் மேலை நாடுகளில் இந்த மருந்து தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதால் எஃப்டிஐ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

    அமெரிக்காவில் ஈரல் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்திருப்பதன் விளைவாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    குரோசின், கால்போல், மெடாசின், பாசிமோல், பைரிஜெசிக் என்று பல பெயர்களில் பாரசிடமால் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மருத்துவர்கள் பரிந்துரையுடன் உட்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இவை எளிதாக கிடைக்கிறது என்பதால் மக்கள் தாங்களாகவே வாங்கிச் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    more
  • பருப்பு சாதம்


    தே.பொருட்கள்:

    பொன்னி அரிசி - 11/2 கப்
    துவரம் பருப்பு - 1/2 கப்
    சாம்பார் வெங்காயம் - 10
    தக்காளி - 1
    பூண்டுப் பல் - 4
    பச்சை மிளகாய் - 3
    மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
    உப்பு+எண்ணெய் = தேவைக்கு
    பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பில்லை,கொத்தமல்லி - சிறிது

    தாளிக்க:

    பட்டை - 1 சிறு துண்டு
    கிராம்பு - 3
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்



    செய்முறை:

    *பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

    *வெங்காயம்+பூண்டு+தக்காளி+பச்சை மிளகாயை அரியவும்.

    *குக்கரில் பட்டர்+எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

    *பின் வெங்காயம்+தக்காளி+பூண்டு+பச்சை மிளகாய்+கறிவேப்பில்லை,கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

    *பொன்னி அரிசிக்கு 1 கப்=2 கப் தண்ணீர் அளவு,ஆக 11/2 கப் அரிசிக்கு=3 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் துவரம்பருப்புக்கு 1 கப் தண்ணீர் அளவு.

    *வதங்கியதும் அரிசி+துவரம்பருப்பு+உப்பு+மஞ்சள்தூள்+4 கப் தண்ணீர் வைத்து குக்கரை மூடவும்.

    *ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

    *ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறவும்.

    more
  • இலந்தைப்பழம்

    இலந்தை பழம்.

    வட இந்திய மாநிலங்களில் விளையும் பழம் சற்று நீளமாகவும் பெரிதாகவும் இருக்கும். சதைப்பற்றும் அதிகமாக இருக்கும்.


    தமிழ்நாட்டில் சிறு நெல்லிக்காயளவிற்கு இருக்கும். தள்ளு வண்டியில் வைத்து பள்ளிக்கூடங்களுக்கருகில் விற்கப்படும். உப்பு, மிளகாய்பொடி தூவி பொட்டலம் போட்டு சாப்பிடுவதில் பிள்ளைகளுக்கு ஒரே உற்சாகம் தான்.

    அப்படியே சாப்பிடப்படும் இந்தப் பழத்திற்கு சமையலறையில் அவ்வளவாக வரவேற்பு இல்லாவிடினும், மேலை நாட்டினர் இதை மிட்டாய், ஊறுகாய் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதில் உபயோகிக்கிறார்கள்.

    தமிழ் நாட்டை பொறுத்தவரை, நான் அறிந்த ஒரே தின்பண்டம் "இலந்தை வடை" தான். (வேறு பண்டங்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்). வெயிலில் காய வைத்தப் பழத்திலிருந்து கொட்டைகளை நீக்கி விட்டு, அத்துடன் கொஞ்சம் புளி, மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இடித்து, வடை போல் மெல்லியதாகத் தட்டி, மீண்டும் வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பார்கள். கிராமத்துக் கடைகளில் கிடைத்து வந்த இது, இப்பொழுது நகர அங்காடிகளிலும் கிடைக்கிறது.

    மருத்துவ குணங்கள் நிறைந்த இது, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. வயிற்று வலி, தொண்டைப்புண், மலச்சிக்கல், குடற்புண் ஆகியவற்றை ஆற்றுப்படுத்த வல்லது.

    காய்ந்தப் பழத்தைப் பொடி செய்து ஒரு டீஸ்பூன் உட்கொண்டால், பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு கட்டுபடும்.

    என்னதான் மருத்துவ குணங்கள் இருந்தாலும், இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவதில்லை. ஆனாலும், இதைப் பார்க்கும் பொழுது நிச்சயமாக அவர்கள் பள்ளிக்கூட நாட்கள் நினைவிற்கு வராமல் போகாது.

    more
  • பழங்களின் மருத்துவம்

    நாவல் பழம்


    நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

    நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

    இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரைக் கிடைக்கும்.

    இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.

    வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது.

    தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.

    more
  • பழங்களின் மருத்துவக்குணம்

    பப்பாளி - தேவதைகளின் பழம்


    கிறிஸ்தோபர் கொலம்பஸ், முதன்முறையாக பப்பாளிப் பழத்தைச் சுவைத்தப் பொழுது, இதை "தேவதைகளின் பழம்" என்று வர்ணித்துள்ளார்.


    பப்பாளிப்பழம், சாறு மிகுந்த, இனிப்பானப் பழம். இதில் ஆரோக்கியத்திற்குத் தேவையானச் சத்துக்கள், நிறைய இருக்கின்றன.

    இது சீரண சக்தியை அதிகரிக்கும். இதய நோய், மூட்டு வலி, நுரையீரல் நோய், கண் நோய் ஆகியவைற்றை தடுக்க வல்லது.

    இதில் வைட்டமின் "ஏ", "சி" மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இதில் உப்புச்சத்து குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதோடு, இதன் கலோரி அளவும் குறைவானது. மேலும், இது உடற் கொழுப்பின் அளவையும் குறைக்கக் கூடியது.

    இதன் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
    அல்லது சுவையான "மில்க் ஷேக்" செய்தும் சாப்பிடலாம்.

    more
  • கறிவேப்பிலை


    கறிவேப்பிலை மணம் வீசாத தென்னிந்திய சமையலறையைக் காண்பது மிகவும் கடினம்.

    பச்சை இலைகள் சிறிது கசப்பாக இருந்தாலும்,எண்ணையில் போட்டு தாளிக்கும் பொழுது அருமையாக மணக்கும். இந்த இலைகளை நாம் வெறும் வாசத்திற்கு மட்டும் தாளிப்பில் சேர்த்து விட்டு, சாப்பிடும் பொழுது ஒதுக்கி விடுகிறோம்.

    ஆனால், கண்டிப்பாக நாம் இவற்றை உணவோடுச் சேர்த்து உட்கொள்ள வேண்டும். கறிவேப்பிலையைப் பொடி செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். சட்னியாக செய்து தினப்படி சாப்பிட மிகவும் நல்லது.

    இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். மேலும், இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.

    more
  • இஞ்சி


    ஜீரண சக்திக்கு மிகவும் உதவும் இஞ்சி மருத்துவ குணங்கள் பல நிறைந்தது.

    தொண்டை புண், தலைவலி, காய்ச்சல், இருமல் போன்றவற்றை போக்க வல்லது.

    தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், நோய்கள் நம்மை அணுகாது.

    more

நிலாமுற்றம்

Advertisement